Saturday, July 13, 2019

போதனைகள் சொல்ல வேண்டிய வயதில் போதையில் தள்ளாடுவதேனோ???.....

தவமாய் தவமிருந்து
பெற்ற பிள்ளைகளை
ஆசைகள் கொட்டி
வளர்க்க வேண்டுமென்று
எத்தனை நிலாபொழுதை
கடன் வாங்கிய உள்ளங்கள்
அற்ப ஆசைகளுக்காய்
பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை
ஏன் வார்க்கிறீர்கள்???
வானுயர ஆசைகள் வளர்த்த பிள்ளைகள் முகம்
கருகி போகிதே உங்கள்
கயமை தனத்தால்.
சொற்ப நேர இன்பத்துக்கு
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
மலிவு விற்பனையில் ஏலம் போகிதே
போதை பொருளுடன் சொந்தம் கொண்டாடி பொறுப்பின்றி நடப்பதேனோ????
போதனைகள் சொல்ல வேண்டிய வயதில் போதையில் தள்ளாடுவதேனோ???
பொசுங்கி போகிறதே
பொசு பொசு என்று
குழந்தைகள் மனசு.
வானுயர வளர்த்த ஆசைகள்
வாள வழியின்றி காகிதப் பட்டமாய்
காற்றிலே ஏறி விண்ணிலே முட்டுதே
கனவுகள் கரைந்து......
கனவுகள் வளர்ந்திட கைகொடுங்கள்
உன் பிள்ளை சொல்வான்
நாளை உந்தன் பெயரை.

     💓வவுனியூர் ரஜீவன்

உன் ஓரப் பார்வை........""வவுனியூர் ரஜீவன் ""


My profile